Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்… நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களைப் போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடத்திற்கான நீட் தேர்வில் தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சியை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை புதிதாக திட்டமிட்டுள்ளது.

அதற்காக நாடு முழுவதும் நீட் பயிற்சியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் ஆசிரியர்களை நியமித்து தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக தீவிர பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சி அக்டோபர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |