Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…. சற்றுமுன் புதிய பரபரப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன் என்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தமிழகம் முழுவதும் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |