தமிழக முழுவதும் அமைந்துள்ள மது கடைகளில் அதிகமாக வெளிநபர்கள் பணியாற்றி வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது கடும் நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.