தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும்.
அவ்வகையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர்.ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.