இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.