Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .அதனைப் போலவே உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |