தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 1,913 பேர் குணமடைந்துள்ளனர். 9,440 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,47,581 ஆக அதிகரித்துள்ளது. 34,00,144 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,997 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 144 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.