தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,812 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்து 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,915 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 8,229 பேர் குணமடைந்துள்ளனர். 41,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 461 பேரும், கோவை 432 பேரும், செங்கல்பட்டில் 208 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.