தமிழகத்தில் 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி பால் மற்றும் தயிரின் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன.
இதன் மூலம் அந்த நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.66 வரை விற்கப்படும். மூலப்பொருட்கள் மற்றும் கொள்முதல் விலை உயர்வே பால் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.