தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கடும் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள் விமானத்தில் இன்று சென்னை வருகின்றன. இன்று காலை 60,000 கோவாக்சின் தடுப்பூசிகள், மாலையில் 4,67,210 கோவிஷில்டு தடுப்பூசிகள் வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.