கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு மானியம் வழங்க ரூ.499.227 கோடி ஒதுக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பசுமை வீடு திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கு தலா 1.1 லட்சம் மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு தலா 3 லட்சம் மானியத்தில் 8,803 வீடுகளும் கட்டப்பட உள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.