இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொது சபை வருகின்ற 2023 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் மக்காச்சோளம், தவிர சிறு தானியங்கள் உற்பத்திய உயர்த்தவும் பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் இறை இறையன்பு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து தலைவர்கள், கூட்டுறவு உணவு மற்றும் உணவு பாதுகாப்பு , மக்கள் நல்வாழ்வு, பள்ளி கல்வி, உயர் கல்வி, சமூக நல ஊரக வளர்ச்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகள் மூலம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்களுக்கு மாதந்திர வாரியாக செயல்படுத்த வேண்டிய தொழில்நுட்ப மற்றும் விளம்பர பணிகள் குறித்த விவகாரம் நடைபெற்றது.
அப்போது பேசிய தலைமை செயலர், தற்போது மக்களிடையே அரிசி உணவு அதிகரித்து சோழம், கம்பு, கேழ்வரகு, திணை வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டதால் சாகுபடி பரபரப்பு குறைந்துள்ளது. குறைந்த வயது அதிக ஊட்டச்சத்து வளர்ச்சியை தாங்கி வளரும் தம்மை மற்றும் பூச்சி நோய் அதிகம் தாக்காத நிலை போன்ற காரணிகளால் மானாவாரி நிலங்களை சிறு தானியங்களை சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் இட்ட இயலுமானால் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கு ஊட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு செல்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது என்பதை தலைமைச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
எனவே கூட்டுறவு துறை, சமூக நலத்துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம் மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களுக்கு தேவையான சிறு தானியங்களை தமிழக விவசாயகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக மேலாண்மை பல்கலைக்கழகம் சிறுதானிய ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கவும் தானியங்களின் சேமிப்பு காலத்தினை கூட்டி மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்களின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார். மேலும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் மேம்பட பொதுமக்களிடம் தேவையான அதிகரிக்க வேண்டியது அவசியம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.