தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பதால், தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் எனவும், ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.