Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மீன் விலையும் உயர போகுது…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதனால் மீன் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதியன்று மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது. இதனிடையே தொடர்ந்து டீசல் விலை உயரும் பட்சத்தில் மீன் விலையும் கிடுகிடுவென உயரும் என கூறப்படுகிறது. இவ்வாறு மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |