தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரவுடிகளை ஒடுக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை டி.ஜி.பி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போன்றோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியபோது, சென்னை காவல்துறை இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் காவல் துறை உயர் அதிகாரிகள் காவல் ஆளுநர்கள் என மொத்தம் 23 ஆயிரம் பேர் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இது தமிழ்நாடு காவல் துறையில் 26 சதவீதம் ஆகும். காவல்துறையில் பெண் காவலர்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அத்தகைய பெண் காவலர்கள் வருமுன் காப்போம் என்பதை கடைபிடிக்க வேண்டும். பெண் காவலர்களின் உடல் நலம் காக்க வேண்டும். அவர்கள் நன்றாக இருந்தால்தான் காவல்துறை நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.