தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு நடைபெறுகின்றது. இந்த தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் பட்சத்தில் அதில் தேர்வு செய்யப்பட்ட 1500 மாணவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.