தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து அதாவது இனிசியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைத்து அலுவலர் பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும் அதில் இனிசியல்-ஐ தமிழில் எழுதப்பட வேண்டும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பம் முன்னிறுத்தும் இருக்கும் என சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் இந்த நடைமுறைகளை தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தவறாது நடைமுறைப்படுத்தி ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.