தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்கள், சிலை, நகை, விழாக்கள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஏற்கனவே உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.