தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். காவலர் தேர்வில் முதல் முறையாக பொது தேர்வுடன் சேர்த்து தமிழ் மொழி தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
இணையதளம் – www.tnusrb.tn.gov.in