Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதார்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஸ்டெப் டிஜிட்டல் சர்டிபிகேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு கொரோனா காலத்திற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகவே சென்னை மாநகராட்சியில் ஆயுள் காப்பீடு சான்றிதழ் வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சியிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களுடைய ஆயுள் காப்பீடு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி போஸ்ட்மேனிடம் பிபிஓஎன், ஓய்வூதிய கணக்கு எண், செல்போன் நம்பர் மற்றும் ஆதார் அட்டை எண், கைரேகை போன்ற விவரங்களை சமர்ப்பித்தால் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை உடனடியாக சமர்ப்பிக்கலாம். மேலும் அரசின் அறிவிப்பால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |