தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 12 துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் ஆயத்த ஆடை, வீட்டு அலங்காரம் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி அளிக்க தனியார் அமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் வழியாக 12 துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள் பயிற்றுநர்களுக்கான பயிற்சி, மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கான மொத்த செலவை தமிழக திறன் மேம்பாட்டு கழகம் ஏற்கும். உலகத் திறன் போட்டிகளில் தமிழகத் திறன் பயிற்சியாளர்கள் பங்கேற்று புத்தகங்களில் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நல துணை செயலாளர் கிர்லோஷ் குமார், திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்க இருக்கின்றனர்.