தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி எடுக்கப்பட்ட அரையாண்டு தேர்வு விடுமுறை ஜனவரி 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 2 முதல் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது இதையடுத்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து 10 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து ஆன்லைன் வெறுப்புகளை தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது மூன்றாம் பருவம் தொடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மூன்றாம் பருவ பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் மூன்றாம் பருவம் தொடங்கி இத்தனை நாள் ஆகியும் பள்ளிகளிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் பள்ளி மாணவர்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு ஆன்லைன் வகுப்புகளை விரைந்து நடக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைகள் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.