Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 ரொக்கத் தொகை…. விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ…!!!!!

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி  பகுதிகளில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண்மை ஆகியவற்றில் சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்கு பெற்று அதில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம் வரை வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு பெறும் விவசாயிகளுக்கு 60,000 ரொக்க தொகையும், மூன்றாவது பரிசு பெறும் விவசாயிகளுக்கு 40,000 பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் இந்த சிறந்த விவசாயிகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதனை விண்ணப்பிப்பதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல் மாவட்ட அளவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி வேளாண்மை போன்றவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கும் முதல் பரிசு ரூ.15,000யும்,  2-வது பரிசு ரூ.10,000, மூன்றாவது பரிசு ரூ.5,000 வழங்கப்பட இருக்கிறது. இன்றைய இந்த விவசாய விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் இன்று மாலைக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் பணி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |