Categories
அரசியல்

தமிழக அரசு கோவையை புறக்கணிக்கிறதா…? சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து  அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையை எப்போதுமே திமுகவின் பிரஸ்டீஜ் பிரபலமாக பார்த்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். மாநிலம் முழுவதும் கணிசமான இடங்களை திமுக பெற்று இருந்தாலும் கோவையில் உள்ள 10 இடங்களில் 9 அதிமுகவும் ஒன்றில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் வெற்றிவாகை சூடியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின் இந்த அரசு எல்லோருக்குமான அரசாக இருக்கும். வாக்களித்தவர்கள் கூட ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிற்கு செயல்படும் என கூறியுள்ளார்.

இது கோவையை மனதில் வைத்துதான் ஸ்டாலின் சொல்கிறார் என அப்போதே பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஸ்டாலின் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றார். கொரோனா கவச உடை அணிந்து அவர் சென்றதும் கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தான். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கை திமுகவின் கோட்டையாக மாற்றி  காட்டுவதற்காக செந்தில்பாலாஜியை களமிறங்கியுள்ளார் ஸ்டாலின். தேர்தல் பெருவாரியான இடங்களை கோவை மாநகரில் திமுக கைப்பற்றும் என்ற உறுதியையும் முதல்வரிடத்தில்  கொடுத்துவிட்டு கோவையில் களப்பணி ஆற்றிய செந்தில்பாலாஜி சொன்னதை செய்தும் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்பின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எம்எல்ஏ ஈஸ்வரன் கோவையில் அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலத்தை சேலம்-கொச்சின் சாலையில் உள்ள நிலம்பூர் சந்திப்பு வரை விரிவாக்கம்  செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கூட கோவை தினசரி பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிக்கிறதோ? என்று செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் துறைக்கு மிகவும் முக்கியமான கோவையை  புறக்கணிக்கும் என்னும் திமுக அரசுக்கு இல்லை என கூறியுள்ளார்.மேலும், அவினாசி மேம்பாலம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டதாகவும், ஆனால் திட்ட மதிப்பீடு ரூ.1,000 கோடி என்றும் குறிப்பிட்ட அமைச்சர் எ.வ.வேலு, மேம்பால பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும், விரைவாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ.1,000 கோடி அரசு செலவு செய்கிறது என்றால் கோவைக்கு அரசு முக்கியம் தருகிறது என்று தான் பொருளாகும். போக்குவரத்து செறிவு என்பது தற்போது பாலம் போடும் இடம் வரை தான் உள்ளதாகவும், அதை நீட்டிக்க வேண்டுமா, தேவை உள்ளதா என்பதை முதலமைச்சர் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷன் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பில் உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான சாலை. ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று தான் பாலம் கட்ட முடியும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று அவரிடமும் வலியுறுத்தியுள்ளார். அந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |