கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா விதிகளை மீறுவோருக்கு தமிழகத்தில் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் மட்டுமே வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராதம் விதிப்பது தொடர்பான அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.