Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது…? முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்  சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர், மனித வள மேலாண்மை துறை, அரசு முதன்மை செயலர், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் போன்றவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்த கடிதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது 4 சதவிகிதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவிகிதமாக வழங்கிட உரிய ஆணை தீபாவளி பண்டிகையினை கருத்தில் கொண்டு காலதாமதம் இன்றி உடனடியாக பிறப்பிக்கப்பட ஆவன செய்யுமாறு கோரி கடந்த 7.10.2022 அன்று கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி தொடர்ச்சியாக அகவிலை படியை ஆறு மாதங்கள் காலதாமதமாக அறிவித்து வரும் தமிழக அரசின் போக்கு ஏற்றத்தக்கது அல்ல. இந்த நிலையில் அகவிலை உயர்வினை வழங்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக வரும் செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |