நாமக்கல்லை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இந்திய கம்யூனிச சித்தாந்தங்களை உள்ளடக்கி தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை, மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா என ஏழு நாவல்களை எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், புஷ்பேக், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories
தமிழக அரசியல் பிரபலம் மரணம்…… கண்ணீர்….. பெரும் சோகம்…..!!!!
