Categories
அரசியல்

தமிழகத்தில் 23 மாவட்டத்தில் ஷாக் – வேதனையில் எடப்பாடி சர்கார் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58,818 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,42,482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 33 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,490ஆக அதிகரித்துள்ளது. தமிழக்தில் இன்று எந்த மாவட்டமும் தப்பாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசை நடுங்க வைத்துள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு:

சென்னை – 21

மதுரை – 9

திண்டுக்கல் – 6

காஞ்சிபுரம் – 5

விருதுநகர் – 5

திருவள்ளூர் – 4

வேலூர் – 4

செங்கல்பட்டு – 3

நாகை-3

சிவகங்கை -3

கோவை – 2

கடலூர் -2

நெல்லை – 2

தூத்துக்குடி – 2

தேனி – 2

தி.மலை – 2

திருவாரூர் – 1

தென்காசி- 1

தஞ்சை – 1

ராமநாதபுரம்-1

புதுக்கோட்டை -1

ஈரோடு -1

அரியலூர் -1

 

இன்று மட்டும் – 82 | இதுவரை மொத்தம் – 3,741

Categories

Tech |