Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் விநாயகர் சிலை – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ….!!

பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் அரசின் தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களின் மிரட்டலை தடுக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது… இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் உத்தரவை மீறும் இது போன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஒரு பணியை சட்டப்படி செய்யாவிட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். அரசின் உத்தரவை மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.

Categories

Tech |