Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை…. சற்றுமுன் திடீர் திருப்பம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து நவம்பர் 1 முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் புதிய தகவலை தெரிவித்துள்ளார். முதல்வர் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் விவாதித்தோம் என விளக்கம் அளித்துள்ளார். நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பு அறிக்கை வெளியான நிலையில் திடீர் திருப்பமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |