தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள் உருவாக்கியுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருந்தது போலவே ஒரு நாம் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் விரைவில் ஆயிரத்தை தாண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் விரைவில் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.