Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 2 டோஸ் போட்டால் மட்டுமே இவர்களுக்கு அனுமதி…. வெளியான புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று முககவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். அதேபோல் வாக்காளர்களுக்கு கொரோனா அறிகுறிகளுடன் 98.4 பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் அவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |