நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் இந்த தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல்,உயிரி தாவரவியல், கணினி அறிவியல் செய்முறை தேர்வு நடக்கிறது. மே23 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செய்முறை தேர்வில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.