Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில்…. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதாவது, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழக டிஜிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலோ, குற்ற பின்னணி கொண்ட தகவல்கள் கிடைத்தாலோ சட்டவிதிகளை பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. எனவே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயரதிகாரிகள், காவல்துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |