தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடைபெறுவதில்லை. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை லஞ்சம் லஞ்சம் என்ற வார்த்தை அடிபட்டு கொண்டே இருக்கும். பணம் உள்ளவர்கள் அதற்கான தகுந்த பணத்தை கொடுத்துவிட்டு தங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாத சாதாரண மக்களின் நிலை என்னவோ கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் லஞ்சம் வாங்குவது குற்றம்,கொடுப்பது குற்றம் என்ற பெயர் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்குபவர்களுக்கு…. தமிழக அரசு எச்சரிக்கை மணி….!!!!
