Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சியில் 15-வார்டுகள் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிமுக ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு இந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். அந்த பணத்தை கண்டிப்பாக வழங்குவோம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |