Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் பொருட்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடை, அளவு, தரத்துடன் உரிய காலத்தில் வினியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த பணியில் சுணக்கமாக செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்காணிக்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |