தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது நவம்பர் 9ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.