தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜூன் 11-ந்தேதி குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.
மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்கள் குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.