Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி 15 நாள்களுக்கு ஒருமுறை…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இனி பள்ளிகளில் 15 நாட்கள் ஒரு முறை அனைத்து மாணவர்களுக்கும் RT-PCR சோதனை நடத்த கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா பதிவாகின்றதோ அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவி வருவதால் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து மாணவர்களுக்கும் RT-PCR சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |