12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகரின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படியாக, புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, புகார் பெட்டி ஒன்றை அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!
