தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. எனவே மாணவர்கள் யாருக்காவது பாட புத்தகங்கள், நோட்டுகளும், கல்வி உபகரணங்களும் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும் எனவும் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் வழியாக தகவல்கள் சேகரிக்கப்பட்ட தகுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். எனவே பாதிப்புக்குள்ளான மாணவர்கள் இது குறித்த தகவல்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!
