Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ந் தேதி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 15,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |