Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்று மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இரவு 9 மணிக்குப் பிறகு கணக்குகளை முடிக்க 10 மணி ஆகிவிடுகிறது. இரவு ஊரடங்கு என்பதால் வீட்டுக்கு திரும்ப சிரமம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |