Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருப்பதால் (ஒரு நாள் முழுவதும்) டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |