Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கடந்த நான்கு மாதமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இருந்தாலும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளிலும் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றன. தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்து வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளது.

இதனிடையே தமிழக அரசாங்கம் சார்பாக பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 15ஆம் தேதி முதல் பாட புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் லேப்டாப் எடுத்து வரவேண்டும். வீடியோ பாடங்களும் வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் லேப்டாப் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |