தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்காக மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.