இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1800 ஆக அதிகரித்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் தினசரி குறைந்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதனைப் போலவே ஒமைக்ரான் பாதிப்பும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் இரவு ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.