தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று திறனாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில்களில் சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நுழைவு வாயில் அருகே குறைந்த பட்சம் ஐந்து சக்கர நாற்காலிகள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.