நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்த இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி அதிகாரிகள் சிலர் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது அதிகார அத்துமீறல்களை ஈடுபடுகின்றனர். உரிமையாளர்கள் விதியை மீறியதாக ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்கின்றனர். இது தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.